இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் கீப்பிங் கையுறையில் உள்ள பாராமிலிட்டரி பாலிடன் முத்திரையை நீக்க வேண்டும் ஐசிசி தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி, சவுதாம்ப்டன் நகரில் நேற்றுமுன் தினம் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனி, பாராமிலிட்டரியின் பலிடான் முத்திரை பதித்த கையுறைகளை (GLOVES) அணிந்திருந்தார். இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ ஆகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு, ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் பதவி வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு தோனி, பாராமிலிட்டரி பிரிவில் சிறிய பயிற்சியும் மேற்கொண்டார். தனது கையுறையில் பாலிடன் முத்திரையை தோனி பதித்திருந்தற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியாக்கள் இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, தோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியது.
இந்நிலையில், தோனியின் கையுறையில் இருக்கும் பாலிடன் முத்திரையை நீக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்து ஐசிசி, ஒரு கையுறையில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு முத்திரைகள் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மற்ற முத்திரைகளுக்கு அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே தோனி தனது கையில் இருக்கும் பாலிடன் முத்திரையை நீக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும், இது ஒரு நடைமுறை தான் என்றும், இதற்காக தோனிக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.