விளையாட்டு

தோனிக்கு மட்டும் முன்னுரிமை ஏன்?... ஹர்பஜன் விரக்தி

webteam

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், சமீபகாலங்களில் தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறிப்பிடும்படியாக இல்லை. அதேநேரம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அணி தேர்வில் தோனிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. போட்டி குறித்து நல்ல புரிதல் கொண்ட தோனி போன்ற அனுபவஸ்தர்கள் அணியில் இருப்பது சிறப்பானதுதான். தோனியின் அனுபவம் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதேபோல கடந்த 19 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் எனது அனுபவம் குறித்து அணித் தேர்வின்போது பரிசீலிக்காதது ஏன்? என்று ஹர்பஜன் கேட்டுள்ளார்.

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1ல் தொடங்குகிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.