விளையாட்டு

கணுக்காலில் காயம்: ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

webteam

கணுக்காலில் ஏற்பட்ட காயத்தை அடுத்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் டி20 கேப்டனுமான ஹர்மன்பிரீத் கவுர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.  

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதலாவது ஒரு நாள் போட்டி மும்பையில் நாளை நடக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் வரும் 25 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடக்கிறது. 

இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக,  இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஹர்மன் பீரீத் கவுர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப் போது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. காயம் அதிமாக இருப்பதால், அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக பஞ்சாபை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஹர்லீன் தியோல் சேர்க்கப்பட்டுள்ளார்.  ஒரு நாள் போட்டியை தொடர்ந்து நடக்கும் டி20 தொடருக்குள் அவர் காயம் குணமாகா விட்டால், டி20 தொடரில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அணியை வழிநடத்துவார் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.