விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது ஏன் ? - ஹர்பஜன் சிங் விளக்கம்

webteam

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய நிலையில், அதுகுறித்து ஹர்பஜன் விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், “அன்பு நண்பர்களே. தனிப்பட்ட காரணங்களால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நான் விளையாடப் போவதில்லை. இது கடினமான நேரம் என்பதால், நான் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அத்துடன் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட போகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் எனக்கு மிகுந்த ஆதரவளிக்கிறது. சென்னை அணிக்கு இது ஒரு சிறந்த ஐபிஎல் போட்டியாக அமைய எனது வாழ்த்துக்கள். பாதுகாப்புடன் இருங்கள். ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனிப்பட்ட காரணங்களால் நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார். பின்னர் தான் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவும் தனிப்பட்ட காரணங்களால் விலகியிருக்கிறார்.