விளையாட்டு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கங்குலி நலம் பெற்று வீடு திரும்பினார்

Veeramani

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி நலம் பெற்று வீடு திரும்பினார்.

கங்குலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லாத நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். எனினும், மருத்துவர் கண்காணிப்பில் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.