விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் சிந்து தோல்வி

webteam

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைப்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் அகேனே யமாகுச்சியை எதிர்கொண்டார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே சிந்துவுக்கு சவாலாக அகேனே விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகேனே 21-14, 21-9 என்ற நேர் செட் கணக்கில்  சிந்துவை வீழ்த்தினார்.