விளையாட்டு

“தோனி செம ஷார்ப்பானவர்; ராஞ்சி தெருக்களில் கிரிக்கெட்டை கற்றவர்” - கிரேக் சேப்பல்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ‘செம ஷார்ப்பானவர்’ என புகழந்துள்ளார் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் 2005 முதல் 2007 வரையில் பயிற்சியாளராக இந்திய அணியுடன் பயணித்துள்ளார். தோனி சர்வதேச கிரிக்கெட் களத்திற்குள் அடியெடுத்து வைத்த ஆரம்பகட்ட காலம் இது. 

“இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் இன்றும் முறையான கிரிக்கெட் பயிற்சி என்பது கிடைக்காமல் உள்ளது. அதனால் முறையான பயிற்சி ஏதும் இல்லாமல் இளம் பருவத்தினர் தெரு மற்றும் காலியாக உள்ள நிலங்களில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த இடத்திலிருந்துதான் அணியின் பெரும்பாலான நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டை கற்றுக் கொண்டனர். அதில் ஒருவர் தான் தோனி. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியிலிருந்து வந்தவர். அவரை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். 

தோனி தனது ஆரம்பக்கட்டத்தில் பல்வேறு அனுபவமிக்க தனி நபர்களுடன் பல களங்களில் போட்டியிட்டுள்ளார். அது அவரது முடிவெடுக்கும் திறனை வளர்த்தது. அது மற்ற வீரர்களிடமிருந்து அவரை தனித்துவம் செய்து காட்டியது. நான் சந்தித்த கிரிக்கெட் குறித்த கூர்மையான புத்தியை கொண்டவர்களில் தோனியும் ஒருவர்” என சேப்பல் சொல்லியுள்ளார்.