விளையாட்டு

“சச்சினுக்காக கோப்பையை வெல்ல விரும்பினோம்!” - 2011 உலக கோப்பை குறித்து யுவராஜ் சிங்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011இல் 50 ஓவர் உலக கோப்பாயை வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்காக கோப்பையே வெல்ல நாங்கள் விரும்பினோம் என தெரிவித்துள்ளார் அந்த தொடரின் நாயகனான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். அது எங்களுக்கு உத்வேகத்தையும் கொடுத்தது என அவர் தெரிவித்துள்ளார். 

“இந்திய அணி வரலாறு படைத்த நாள் தான் ஏப்ரல் 2, 2011. தேசத்தின் கோப்பை கனவை சுமந்தபடி பயணித்த சச்சினுக்காகவும், இந்தியாவுக்காகவும் உலக கோப்பை வெல்ல விரும்பினோம். இந்தியா அணிக்காக விளையாடவும், அதன் மூலம் தேசத்திற்கு பெருமை தேடி கொடுக்கவும் நான் கடமைப்பட்டுள்ளேன்” என யுவராஜ் ட்வீட் செய்துள்ளார். 

2011 உலக கோப்பை தொடரில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை யுவராஜ் வீழ்த்தி இருந்தார். அதில் 4 அரை சதங்களும், ஒரு சதமும் அடங்கும்.