விளையாட்டு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சந்த் ரெய்னா காலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது. ரெய்னாவின் தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 

அவரது மறைவுக்கு ஹர்பஜன் சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தனது பெயரை கொடுத்துள்ளார். அவரை சென்னை அணி தக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார் அவர்.