விளையாட்டு

ஜூலை 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படுகிறது இந்திய குழு

Rasus

ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சம்மேளன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

90 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய இந்த முதல் குழு, ஏர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்படவுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித ஒப்புதலும் வராதாது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம், கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கும் வகையில் பயணத்தை திட்டமிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.