விளையாட்டு

இந்திய அணி ஜெயிக்க வழிபாடு

webteam

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி, கர்நாடகாவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

குல்பர்காவில் நடத்தப்பட்ட வழிபாட்டில் திரளான கிரிக்கெட் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்ற தொடர்களில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதில்லை என்ற நிலை தொடரும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

‌சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. பர்மிங்க்ஹாம் நகரில் நடைபெறும் போட்டி, பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்குகிறது.