விளையாட்டு

சென்னை டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்!

சென்னை டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்!

jagadeesh

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லே களமிறங்கினர். இந்திய வேகப்பந்துவீச்சை திறம்பட விளையாடி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தனர். இந்த பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தும் விளையாடி வந்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ரோரி பர்ன்ஸ்.

இதனையடுத்து லாரண்ஸ் களமிறங்கினார். அப்போது பும்ரா பந்துவீச 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார். இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இதில் டோம் சிப்லே 26 ரன்களும், ஜோ ரூட் 4 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.