விளையாட்டு

ஒலிம்பிக் ஓட்டப்பந்தயம்: கடைசி இடம் பிடித்து இந்தியாவின் டூட்டி சந்த் தோல்வி

JustinDurai
மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் கடைசி இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் கடைசி இடத்தைப் பிடித்து தோல்வியடைந்தார். நமீபியா வீராங்கனை கிறிஸ்டின் எம்போமா முதலிடத்தையும், அமெரிக்க வீராங்கனை கேப்ரியல் தாமஸ் இரண்டாமிடத்தையும் , நைஜர் வீராங்கனை அமினடோ செயினி மூன்றாமிடத்தையும் பிடித்து வெற்றிப் பெற்றனர்.