விளையாட்டு

'இந்திய வீரர்கள் எனக்கு ஹார்ட் அட்டாக் வரவழைக்கின்றனர்'- தென்னாப்ரிக்க நடுவர்

JustinDurai

இந்தியா - தென்னாப்ரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஒவ்வொரு ஓவரிலும், இந்திய வீரர்கள் தனக்கு நெஞ்சடைப்பை ஏற்படுத்துவதாக நடுவர் நகைச்சுவையாக கூறினார்.

ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 240 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் தென்னாப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்துள்ளது. விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என உத்வேகத்தோடு விளையாடும் இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவரின் போது நடுவரிடம் முறையீடு செய்தனர். இதை நகைச்சுவையாக குறிப்பிட்ட தென்னாப்ரிக்க நடுவர் எராஸ்மஸ், இந்திய வீரர்கள் தனக்கு நெஞ்சடைப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.