விளையாட்டு

“தோனியை ஏலத்தில் எடுக்க அவ்வளவு போட்டி” - 2008 நினைவுகளை பகிர்ந்த ரிச்சர்ட் மேட்லி!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியை ஏலத்தில் எடுக்க பலமுனை போட்டி நிலவியதாக முன்னாள் ஐபிஎல் ஏலதாரர் ரிச்சர்ட் மேட்லி தெரிவித்துள்ளார். முதல் சீசனின்போது தோனிக்கு அதிக டிமாண்ட் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வினுடனான பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் அவர். 2007 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்திருந்தார் தோனி. 

“தோனியை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டோ போட்டி போட்டன. அதில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது. சென்னை அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவர் தேவைப்பட்டார். அதனால் தோனியை பிக் செய்யும் நோக்கத்தில் அந்த அணி நிர்வாகம் இருந்தது. இறுதியில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தோனியை சென்னை அணி வாங்கியது” என சொல்லி முதல் ஏலம் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் மேட்லி.