விளையாட்டு

தோள்பட்டை காயம்: விலகினார் ஆண்ட்ரூ டை

webteam

காயம் காரணமாக குஜராத் லயன்ஸ் வீரர் ஆண்ட்ரூ டை ஐபிஎல் நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார்.

மும்பை அணியுடனான போட்டியின் போது அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில வாரங்கள் சிகிக்சை எடுக்க வேண்டியுள்ளதால் நடப்புத் தொடரில் இருந்து ஆண்ட்ரூ டை விலகியுள்ளார். நடப்புத் தொடரின் மூலம் முதன்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆண்ட்ரூ டை, 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆண்ட்ரூ டை விலகியுள்ளது குஜராத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்கும் தோள்பட்டை காயம் ஏற்பட்டுள்ளது.