விளையாட்டு

"தோனி பேட்ஸ்மேனாக கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும்" - இயன் பிஷப், மஞ்ச்ரேக்கர் கருத்து

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் பாதி ஆட்டதில் மும்பை இன்டியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி ஒரு பேட்ஸ்மேனாக அதிக பொறுப்புகளை ஏற்று விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இயன் பிஷப் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளனர். 

பிராவோ மற்றும் டூப்ளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாகி உள்ள நிலையில் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். 

“என்னைப் பொறுத்தவரை சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு வலு சேர்க்க வேண்டும். மொயின் அலி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் என மூவரும் செம ஃபார்மில் உள்ளனர். இவர்கள் மூவரும் ரன் சேர்க்க தவறும் பட்சத்தில் தோனி அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளாக வேண்டும்” என பிஷப் தெரிவித்துள்ளார். 

“ஐபிஎல் அரங்கில் நட்சத்திர வீரரான டூப்ளசிஸ் இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவு தான். அதனால் தோனி பொறுப்புடன் விளையாட வேண்டும் என பிஷப் சொல்வதை நான் ஆதரிக்கிறேன்” என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.