PV.Sindhu
PV.Sindhu pt desk
விளையாட்டு

டென்மார்க் ஓபன் இறகுப்பந்து தொடர்: அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி

webteam

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் ஓபன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 18-க்கு 21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த பி.வி.சிந்து, இரண்டாவது செட்டை 21க்கு 19 என்ற கணக்கில் தனதாக்கிக் கொண்டார்.

PV.Sindhu

இதனை அடுத்து, அனல் பறந்த 3-வது செட்டை ஸ்பெயின் வீராங்கனை கரோலினாமரின் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். இதன் மூலம், அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். உலகின் ஆறாம் நிலை வீராங்கனையாக இருக்கும் மரினுடன் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள பி.வி.சிந்து, 5 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த வாரம் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆர்க் டிக் ஓபன் இறகுப்பந்து தொடரிலும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துஅ ரையிறுதியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.