விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் - தீபக் சஹார் விலகல்

Sinekadhara

காயம் காரணமாக, இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ளார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 இருபது ஓவர் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகிறது. தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்பியுள்ள நிலையில், மாற்று வீரர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.