விளையாட்டு

டாஸ் வென்றது சிஎஸ்கே : முதலில் பந்துவீச முடிவு

டாஸ் வென்றது சிஎஸ்கே : முதலில் பந்துவீச முடிவு

webteam

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பந்துவீசுகிறது.

ஐபிஎல் போட்டியின் 25வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானம் செய்துள்ளார். கடந்த போட்டியைப் போன்று விக்கெட்டுகளை அதிகம் கைப்பற்றும் நோக்கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இந்தப் போட்டி நடைபெறுவதால், ராஜஸ்தான் அணி வலுவுடன் இருக்கும் எனப்படுகிறது. கடந்த முறை ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னையில் அணியில் கேப்டன் தோனி அதிகபட்சம் 75 ரன்கள் குவித்திருந்தார். அந்தப் போட்டி சென்னையில் நடைபெற்றது. ஆனால், இன்றைய போட்டி ராஜஸ்தானில் நடைபெறுவதால் சென்னை மீண்டும் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.