விளையாட்டு

நேருக்கு நேர் முட்டி கீழே விழுந்த டூப்லெஸி - அன்பாக அணைத்து தூக்கிய ரபாடா

EllusamyKarthik

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்கிறது.

முதல் ஓவரிலேயே சாம் கர்ரன் அவுட்டாக டுப்லெஸியும் - வாட்சனும் பொறுப்போடு விளையாடினர்.

பவர் பிளேயின் கடைசி ஓவரை டெல்லி அணியின் ரபாடா வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட டுப்லெஸி லெக் சைடில் தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார். 

அப்போது அவரது பாதையில் ரபாடா குறுக்கிட இருவரும் நேருக்கு நேர் முட்டிக்கொண்டனர். அதில் இருவரும் சரிந்து விழுந்தனர். 

பின்னர் சுதாரித்து எழுந்த ரபாடா, டுப்லெஸியை செல்லமாக அணைத்தபடி ஆறுதல் சொன்னார். 

தொடர்ந்து விளையாடிய டுப்லெஸி அரை சதம் கடந்த நிலையில் ரபாடாவின் வேகத்திலேயே வீழ்ந்தார். 17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.