முன்னாள் கிரிக்கெட் வீரர் வி வி கிரி
முன்னாள் கிரிக்கெட் வீரர் வி வி கிரி புதிய தலைமுறை
கிரிக்கெட்

IND vs PAK | இந்தியா VS பாகிஸ்தான்.. யாருக்கு சாதகமான சூழல் உள்ளது? வி.வி.கிரி பதில்!

PT WEB

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை தங்களின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தை பொறுத்தவரை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி நிச்சயம் பந்து வீச்சை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி. கிரி கூறுகையில், “அஷ்வின், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயரால் இந்திய அணிக்கு நல்ல பலம். போட்டியில் இந்தியா வலுவாக போராடும். ரோகித் ஷர்மா கடந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினார்

பாகிஸ்தானில் பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் சுமார்தான்” என தெரிவித்தார். மேலும், அணியில் யாருக்கு வெற்றிபெறுவதற்கான சாதகமான சூழல் உள்ளது என்பது குறித்தும் அவர் பேசினார். அதை செய்தியில் இனைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.