சசித்ர சேனநாயகே
சசித்ர சேனநாயகே  புதிய தலைமுறை
கிரிக்கெட்

மேட்ச் பிக்ஸிங் புகார்: இலங்கை முன்னாள் வீரர் சசித்ர சேனநாயகே கைது!

Prakash J

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சசித்ர சேனநாயகே. 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் தொலைபேசி மூலமாக மேட்ச் பிக்ஸிங் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அவரை கைது செய்துள்ளது. மேலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.