விளையாட்டு

கண் கலங்கிவிட்டேன்: ஆஸ்திரேலியா டூர் குறித்து மனம் திறந்த நடராஜன் - வீடியோ

webteam

ஆஸ்திரேலியா தொடரை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு சேலம் சின்னப்பம்பட்டியில் பொதுமக்கள் ஒன்றுகூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் குறித்து இன்று நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது,பிறந்த தன்னுடைய குழந்தையை பார்க்க வருவதை விட நாட்டிற்காக விளையாடியதே பெருமையாக இருந்தது என்று நடராஜன் உருக்கமாக கூறினார்.