விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி: வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ரூ. 5 லட்சம் உதவித் தொகை

Sinekadhara

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் பயிற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்காக தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, தற்போது இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் சில சிறப்பு பயிற்சி பெற தமிழ்நாடு அரசிடம் அவர் உதவி கோரியிருந்தார். இந்த நிலையில், பவானி தேவியை ஊக்கவிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தயாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வழங்கினார்.