விளையாட்டு

இலங்கை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: முதலமைச்சர் கண்டனம்

webteam

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூடு காண்டுமிராண்டித்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, இலங்கை தூதரை அழைத்து கடும் கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தது பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.