விளையாட்டு

CSK vs RCB : டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தொன்பதாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி பெங்களூர் அணி பவுலிங் செய்கிறது. 

பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் இதுவரை ஐபிஎல் அரங்கில் 26 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் சென்னை அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணி 9 ஆட்டங்களில் வென்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. 

நடப்பு சீசனில் பெங்களூர் அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம் சென்னை அணி முதல் போட்டியை தவிர மற்ற மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்க உள்ளது.