விளையாட்டு

கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு

jagadeesh

வெளிநாட்டில் வசிப்பவர் வீட்டில் அத்துமீறி நுழைந்து தங்கியிருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான மனோஜ் பிரபாகர், 1999-ஆம் ஆண்டில் எழுந்த சூதாட்ட புகாரில் சிக்கினார். இதனையடுத்து அவர் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சர்வப்ரியா விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் மனோஜ் பிரபாகர் வசித்து வருகிறார். 

அதே குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் உள்ள வீடு ஒன்றின் சொந்தக்காரரான சந்தியா‌ ஷர்மா லண்டனில் சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்தநிலையில் சந்தியா ஷர்மா வீட்டின் பூட்டை உடைத்து, தமது நண்பரை‌ மனோஜ் பிரபாகர் தங்க வைத்திருந்தாக கூறப்படுகிறது.