விளையாட்டு

நம்பர் 1 பேட்மிண்டன் வீரர் லட்சியா சென் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு; காரணம் இதுதான்!

PT

இந்தியாவில் நம்பர் 1 பேட்மிண்டன் வீரர் லட்சியா சென் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லட்சியா சென் மற்றும் அவருடைய சகோதரர் சீராக் சென் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய வயதை மாற்றி போட்டிகளில் பங்கேற்று வருவதாக பெங்களூருவை சார்ந்த கோவியப்பா நாகராஜன் வழங்கிய புகாரின் அடிப்படையில் லட்siயா சென், அவருடைய பயிற்சியாளர், லட்சியா சென் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய பேட்மின்டன் சங்கம் மற்றும் அவருடைய பயிற்சியாளர் கூறுகையில், இது ஆதாரமற்ற புகார் என தெரிவித்துள்ளனர்.