விளையாட்டு

'சூப்பர் ஓவர்' பரபரப்பு: இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலியா

Sinekadhara

இலங்கை உடனான 2ஆவது இருவது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

சிட்னியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் நிசாங்கா மற்றும் சங்கா ஆகியோர் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். எனினும் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியும் 164 ரன்கள் எடுத்ததால், சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை ஆஸ்திரேலியா அணி எளிதாக வென்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகிக்கிறது.