விளையாட்டு

இந்திய பவுலர்கள் திணறல்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா !

jagadeesh

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணி பவுலிங் செய்கிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச்சும், டேவிட் வார்னரும் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்து வருகின்றனர். இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். டேவிட் வார்னர் 59 ரன்களுடனும், ஆரோன் பின்ச் 61 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.