விளையாட்டு

ஐபிஎல் பேட்ஸ்மேன்களின் விளையாட்டா?

ஐபிஎல் பேட்ஸ்மேன்களின் விளையாட்டா?

webteam

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆகி இருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா. தென்னப்பிரிக்க அணியின் முன்னாள் வீர கேரி கிறிஸ்டனுடன் இணைந்து அவர் பணியாற்ற இருக்கிறார். 

அவர் கூறும்போது, ’டி20 போட்டி பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்று சொல்லிவிட முடியாது. பந்துவீச்சாளர்களுக்குமானதுதான். ஐந்து போட்டிகளில் சரியாக விளையாடாத பேட்ஸ்மேன், ஆறாவது இன்னிங்ஸில் 40 பந்துகளில் 120 ரன்களோ, 50 பந்தில் 130 ரன்களோ குவித்துவிட்டால் அது ஹைலைட்டாகிவிடும். அதே போல பந்துவீச்சாளர் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தால் அது கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. 4 ஒவர்களில் 60 விட்டுக்கொடுத்தால், அது பெரிய விஷயமாகிவிடுகிறது. 

அனைத்துப் போட்டியிலும் பந்துவீச்சாளர்களில் பங்கும் சமமாக இருக்கிறது. நீங்கள் டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்கள் குவித்தாலும் வெற்றி பெற முடியாது. 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் மட்டுமே வெற்றி முடியும். பயிற்சியாளர் பதவியில் இருந்து கொண்டு வீரர்களை என்ன மாதிரியாக மாற்றப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். வீரர்களின் மனநிலையைதான் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பந்துவீச்சாளர்களுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று தெரியும். என்ன மாதிரியான வகையில் எப்போது வீச வேண்டும் என கற்றுக்கொடுக்க இருக்கிறேன்’ என்றார்.