விளையாட்டு

'ரத்தக்களரி வாழ்க்கை!' - ரசிகர்கள் Vs ஆரோன் பின்ச் மனைவி... என்ன நடந்தது?

webteam

சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 12 ரன்கள் எடுத்தார். மேலும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), பிக் பாஷ் லீக் (பிபிஎல்) மற்றும் சர்வதேச கிரிக்கெட் என தனது கடைசி 29 டி20 போட்டிகளில் பிஞ்ச் 495 ரன்கள் எடுத்துள்ளார். இதன், சராசரி 17.06. ஆரோன் பின்ச்சின் இந்த மோசமான பாஃர்ம், அவருக்கு சிக்கலை தந்ததோ இல்லையோ, ஆனால் அவரின் மனைவிக்கு சங்கடத்தை தந்துள்ளது.

ஆம், பின்ச் ஆட்டம் தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள் வலைதளங்களில் அவர் தொடர்பாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அப்போது பின்ச்சுக்கு ஆதவராக, அவரின் மனைவி ஆமி பேச ரசிகர்கள் அவரையும் ட்ரோல் செய்தனர். சில ட்ரோல் என்ற வரம்பையும் மீறி அவரை ஆபாசமாக பேசினர். இன்னும் ஒருபடி மேலாக ஆமி தனது சமூக ஊடகங்களில் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அப்படிச் செய்தவர்களுக்கு சமூக ஊடகங்கள் வழியாகவே ஆமி பதிலடி கொடுத்தார். ``ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் நான் திருப்தியான பதிலை கொடுக்க விரும்பவில்லை. ஆனால், இந்த மாதிரியான நிகழ்வு அடிக்கடி நிகழ்கிறது. நான் அதைப் பாராட்டவில்லை, என் கணவர் முயற்சிசெய்து, ஃபார்முக்கு திரும்புவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்.

ஆனால், இதுபோன்ற கீபோர்டு வாரியர்களுக்கு ஒரு ரத்தக்களரி வாழ்க்கையைப் பெற வேண்டும். இது என் வழியில் வந்த மோசமான ஒன்றல்ல; ஆனால், எனக்கு போதுமானதாக இருந்தது. இது ஒன்றும் புதிதல்ல, இது நிச்சயமாக நான் பழகிவிட்ட ஒன்று. பொதுவாக அவற்றை புறக்கணிக்க முடியும்.

ஆனால், சமீபத்தில் என்னை, என் கணவர் மற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர்களை நோக்கி வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்கள் இருந்தன. அப்படி செய்பவர்கள், தங்களை ரசிகர்கள் என்று அழைப்பதையோ, தங்களை பின்தொடர்வதையோ நிறுத்திக்கொள்ளுங்கள். போய் ஒரு வாழ்க்கையைப் பெறுங்கள்" என்று தனக்கு வந்த அருவருப்பான கருத்துகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.