போரை நிறுத்த வலியுறுத்தி மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஓடிசா கடற்கரையில் 'ஸ்டாப் வார்' என்ற வாசகத்துடன் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பத்தை வடிவமைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஷெலன்ஸ்கி ஆகியோரின் உருவத்துடன் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.