ரஷ்யா - உக்ரைன்

உக்ரைன்: கீவ்வில் உள்ள உலகின் 2வது மிகப்பெரிய டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

Veeramani

உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள உக்ரைன் தலைநகர் கீவ்-விலுள்ள டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனுக்குள் புகுந்துள்ள ரஷ்யா தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிறது.

முன்னதாக ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள உளவு அலுவலகங்களுக்கு அருகே உள்ளவர்கள் உடனடியாக வெளியேறுங்கள் நாங்கள் அங்கே தாக்குதல் நடத்தப் போகிறோம்" என தெரிவித்துள்ளது.

நேற்று பெலாரஸ் நாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் 5 வைத்து நாளாக உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.