இந்தியா

பன்னீர் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் மசாலா - சொமாட்டோவுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்

பன்னீர் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் மசாலா - சொமாட்டோவுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்

webteam

பன்னீர் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் மசாலாவை கொடுத்தனுப்பிய சொமாட்டோ ஆன்லைன் புட் டெலிவரிக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து புனே நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக் என்பவர் சொமாட்டோ செயலி மூலம் சைவ உணவான பன்னீர் மசாலாவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு சிக்கன் மசாலாவை அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் சண்முக் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த நீதிமன்றம் சொமாட்டோ ஆன்லைன் புட் டெலிவரிக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது

இது குறித்து வெளியான தகவலின்படி பன்னீர் மசாலாவும், சிக்கன் மசாலாவும் ஒரே மாதிரியாக இருந்ததால் சண்முக்கால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் சிக்கன் மசாலாவை சாப்பிட்ட பிறகே அவருக்கு தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது முதல்முறை இல்லை என்றும் ஏற்கெனவே ஒருமுறை அசைவ உணவை சொமாட்டோ நிறுவனம் மாற்றி அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சொமாட்டோ நிறுவனம், உணவு மாறியதில் தங்கள் தவறு இல்லை என்றும், உணவகமே உணவை மாற்றி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தது. 

இந்நிலையில் சேவை குறைபாட்டுக்காக ரூ.50 ஆயிரமும், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியற்காக ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து சொமாட்டோவுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 45 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நுகர்வோரிடம் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.