இந்தியா

உ.பி: முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் - என்ன காரணம்?

நிவேதா ஜெகராஜா

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதில் அவசர அவசரமாக தரையிறக்கம்.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று வாரணாசி சென்றிருந்தார். வாரணாசியில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர் புறப்பட்டார்.

புறப்பட்ட சிறிது நேரத்திலே அவரது ஹெலிகாப்டர் மீது பறவை ஒன்று மோதியதில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உடனடியாக அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக அங்கிருந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்கட்டமாக சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.