இந்தியா

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு

webteam

உத்தரப்பிரதேச முதலமைச்சராக பாஜக எம்பி யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநில முதலமைச்சர் பதவிக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சராக கோரக்பூர் தொகுதி பாஜக எம்பியான யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார். இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பதவியேற்பு விழா நாளை நடக்கும் என்று கூறினார். இதில், பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். துணை முதல்வராக உத்தரப்பிரதேச பாஜக தலைவர் கேசவ்பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் ஷர்மா ஆகியோர் துணை முதல்வர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.