இந்தியா

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா மே 18-ல் பதவியேற்பு?

Rasus

கர்நாடகாவில் தனது நண்பர் எடியூரப்பா வரும் மே 18-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், சராசரியாக 72.13 சதவிகித வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் பின்னர் பாஜக வெற்றி முகத்தை நோக்கி பயணித்தது. தற்போதைய நிலவரப்படி 113 தொகுதிகளில் பாஜகவும், 67 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்நிலையில் கர்நாடகாவில் தனது நண்பர் எடியூரப்பா வரும் மே 18-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.