இந்தியா

காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ரூ.25,000 பரிசு அறிவித்த பெண்

காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ரூ.25,000 பரிசு அறிவித்த பெண்

webteam

காணாமல் போன தனது கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.25,000 பரிசு தருவதாக பீகாரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அறிவித்துள்ளார்.

பீகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள வர்சாலிங்கச் பகுதியைச் சேர்ந்தவர் பபிதா தேவி. இவர் தனது வீட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக வளர்த்துவந்த கிளி கடந்த 3ம் தேதி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. வீட்டில் ஒருவரைப் போல வளர்த்துவந்த கிளி காணாமல் போனதிலிருந்து, பபிதா சரியாக உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்று அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவிக்கிறார்கள். அந்த கிளியைக் கண்டுபிடிப்பதற்காக சமூகவலைதளங்கள் மூலம் பெரும் முயற்சி எடுத்தும் எந்தபலனும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், தனது கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.25,000 பரிசு வழங்குவதாக அறிவித்து, அதுகுறித்த அறிவிப்பினை அச்சிட்ட நோட்டீஸ் ஒன்றினையும் அந்த பகுதி மக்களுக்கு அவர் அளித்து வருகிறார்.