நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் 18-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் மாதம் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயலகத்திற்கு அனுப்பியுள்ளது.
மோடி அரசு 2-வது முறையாக பதவியேற்றப் பிறகு நடைபெற்ற முதல் கூட்டத் தொடரின் போது, 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளாக கூறப்படுகிறது.