இந்தியா

"ரயில்களில் வைஃபை வசதி நிறுத்தம்" - மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

Veeramani

ரயில்களில் வைஃபை வசதி வழங்குவது நிறுத்தப்படுவதாகவும், 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான், ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்போது 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4ஜி வாயிலான தொலைத்தொடர்பு சேவையில் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.