காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தவரை, முதுகை மசாஜ் செய்து விடும்படி போலீஸ்காரர் கூறிய சம்பவம் பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது.
அமிர்தசரஸில் உள்ள காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த நபர் ஒருவரை, காவலர் இவ்வாறு செய்யுமாறு கூறியிருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் வேகமாப் பரவியது. இதனை அடுத்து அந்தக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.