இந்தியா

அகிலேஷ், மாயாவதி எங்கே ?: உத்தரப்பிரதேச வன்முறை குறித்து பிரியங்கா காந்தி கேள்வி

Veeramani

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் உத்தரபிரதேச மக்களின் பிரச்னைகளை எழுப்பவில்லை என்று உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய பிரியங்கா காந்தி, "ஹத்ராஸ் சம்பவமாக இருந்தாலும் அல்லது லக்கிம்பூர் கெரியாக இருந்தாலும், உத்தரபிரதேசத்தில் பிரச்னைகளை எழுப்பியது காங்கிரஸ் கட்சி மட்டுமே. அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி எங்கே?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பிரியங்கா காந்தி இன்று காலை லக்கிம்பூர் கேரிக்குச் சென்றபோது தடுத்து கைது செய்யப்பட்டார். கைது செய்து வைக்கப்பட்டிருந்த அறையின் தரையை அவர் துடைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நேற்று லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் 8 விவசாயிகள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.