இந்தியா

ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர் உடல்கள்: தனி விமானத்தில் வருகிறது

webteam

ஈராக்கில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களில் 38 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன.

மொசூல் நகரில் கடந்த 2014ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக, கடந்த 20-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மொசூல் நகருக்குச் சென்ற வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், இந்தியர்களின் உடல்களை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வந்தார்.

வழக்கு நிலுவையில் இருப்பதால் மீதமுள்ள ஒருவரின் உடலை கொண்டு வரமுடியவில்லை என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்ரிஸ்டர் மற்றும் பாட்னாவுக்கு வி.கே.சிங் நேரில் சென்று, உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளார்.