இந்தியா

முன்கூட்டி தேர்தல் வராது: வெங்கய்ய நாயுடு உறுதி

webteam

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றவை என்று அவர் கூறியுள்ளார். கட்சித் தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தொண்டர்களை 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதிலிருந்தே தயாராகுமாறு அறிவுறுத்தி வருவதை தவறாகப் புரிந்து கொண்டு இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.