இந்தியா

உத்தரகாண்ட் தூதராக அக்ஷய் குமார் - முதல்வர் அழைப்பு

JustinDurai

உத்தரகாண்ட் மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக செயல்பட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமாரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி.

உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 -ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதராக (பிராண்ட் அம்பாசிடர்) செயல்பட வருமாறு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமாரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி. முதல்வரின் அழைப்பை அக்ஷய் குமார் ஏற்றுக்கொண்டதாகவும், இனி அவர் உத்தரகாண்டின் பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றுவார் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

இதையும் படிக்க: இன்று முதல் எனது பெயரிலோ மனைவி பெயரிலோ சொத்து வாங்க மாட்டேன்' - சரண்ஜித் சிங்