இந்தியா

கழிவறைக்குள் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : காவலரே வன்கொடுமை செய்த அவலம்

webteam

11 வயது சிறுமியை கழிவறைக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் உள்ள அரசு குடியிருப்பு ஒன்றில் பார்வை மாற்றுத்திறனாளி கணவர் மற்றும் மாற்றுத்திறனாளி மனைவி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். இச்சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு குடியிருப்பின் கழிவறைக்கு சென்றிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி கழிவறையில் இருந்து திரும்பவில்லை என்பதால், அவரது தாய் சென்று பார்த்துள்ளார்.

பலமுறை கூப்பிட்டும் சிறுமி குரல் கொடுக்கவில்லை என்பதால் கழிவறையின் கதவை திறக்க தாய் முயன்றுள்ளார். அப்போது கதவு உள்பக்கம் அடைக்கப்பட்டிருப்பதை அறிந்த அவர் கூச்சலிட்டிருக்கிறார். உடனே உள்ளிருந்து ஒரு நபர் கதவை திறந்தவிட்டு ஓடியுள்ளார். தப்பி ஓடிய நபர் அதே குடியிருப்பில் வசிக்கும் காவலர் சஞ்சிவ் ஜுகாடி என்பதை அறிந்த தாய், உடனே உள்ளே சென்று தனது மகளை கண்டுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி நிலையில் கிடந்த மகளை கண்டு கதறியுள்ளார்.

பின்னர் மகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பிய தாய், அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக்கூற, அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், காவலர் சஞ்சிவ் ஜுகாடியை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.