இந்தியா

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: அயோத்தி உட்பட 61 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு

EllusamyKarthik

403 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐந்தாவது கட்ட தேர்தலில் மொத்தம் 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அயோத்தி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு.

வரும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கடைசி இரண்டு கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அன்றைய தினம் வெளியாக உள்ளது.