இந்தியா

கிண்டல் செய்தவரை வெளுத்து வாங்கிய பெண்

webteam

பொது இடத்தில் தன்னை கிண்டல், கேலி செய்த இளைஞரை இளம்பெண் ஒருவர் தாக்கி காவல் துறையில் ஒப்படைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. 

மொராதாபாத் நகரில் சாலையில் சென்றபோது தன்னை கிண்டல் செய்த அந்த இளைஞரை அடித்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் அந்த பெண் ஒப்படைத்தார். காவலர்கள் விசாரிக்கும்போதும் இளைஞரை அந்த பெண் நையபுடைந்துள்ளார்.. இந்த காட்சிகள் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகின்றன.